C .P. L. இல் விளையாடும் வாய்ப்பை இழந்த இலங்கை வீரர்கள்!

C .P. L. இல் விளையாடும் வாய்ப்பை இழந்த இலங்கை வீரர்கள்!

இலங்கை அணி வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் நுவன் துஷார ஆகியோர் கரீபியன் பிரீமியர் லீக்கில் (CPL) விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்த ஆண்டின் கரீபியன் பிரீமியர் லீக் இம்மாத இறுதியில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதில் இருவரும் St Kitts & Nevis Patriots அணிக்காக இவ்விருவரும் விளையாடவிருந்தனர்.

ஆனால், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவ்விரு வீரர்களும் உபாதைக்கு உள்ளாகினர்.

நுவான் துஷார விரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக முழு தொடரையும் தவறவிட்டார், அதே நேரத்தில் ஹசரங்க ஒருநாள் தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளை தவறவிட்டார்.

இதன்படி, ஹசரங்க மற்றும் துஷாராவுக்கு பதிலாக இரண்டு தென்னாபிரிக்க வீரர்களான டப்ரைஸ் ஷம்சி மற்றும் என்ரிச் நொர்ட்ஜே ஆகியோரை அழைப்பதற்கு St Kitts & Nevis Patriots அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.