நெதர்லாந்து கடலில் சரக்கு கப்பலொன்றில் தீ பரவல் - ஒருவர் உயிரிழப்பு - பலர் காயம்!

ஜெர்மனியிலிருந்து – எகிப்து நோக்கி பயணித்த சரக்கு கப்பலொன்றில் இன்று (26) மதியம் நெதர்லாந்து கடற்பகுதியில் வைத்து தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து கடலில் சரக்கு கப்பலொன்றில் தீ பரவல் - ஒருவர் உயிரிழப்பு - பலர் காயம்!

ஜெர்மனியிலிருந்து – எகிப்து நோக்கி பயணித்த சரக்கு கப்பலொன்றில் இன்று (26) மதியம் நெதர்லாந்து கடற்பகுதியில் வைத்து தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 
 
குறித்த கப்பல் மூவாயிரம் வாகனங்களுடன் பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
 
அத்துடன், இதுவரை தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என அந்த நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.
 
கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் காரணமாக, தீ பற்றியிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன், தீ விபத்துக்கான  உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.