மீண்டும் தலைதூக்கும் கொரோனா – இந்தியாவிலும் தொற்று கண்டுபிடிப்பு!

மீண்டும் தலைதூக்கும் கொரோனா – இந்தியாவிலும் தொற்று கண்டுபிடிப்பு!

சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது. இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 257 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை. 257 பேரும் சுகாதாரத்துறை கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.