ஆழ்கடலில் மூழ்கி பிரதமர் மோடி வழிபாடு..

ஆழ்கடலில் மூழ்கி பிரதமர் மோடி வழிபாடு..

குஜராத்தின் துவாரகாதீசர் கோயிலில் நேற்று (25) வழிபாடு நடத்திய பிரதமர் மோடி பின்னர் ஸ்குபா டைவிங் உபகரணங்களுடன் ஆழ்கடலில் மூழ்கி கிருஷ்ணர் கால துவாரகா நகரில் பிரார்த்தனை செய்தார்.

குஜராத்தின் துவாரகா நகரில் துவாரகாதீசர் கோயில் அமைந்துள்ளது. இது திருமாலின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். பிரதமர் மோடி நேற்று துவாரகாதீசர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.

பின்னர் அவர் ஸ்குபா டைவிங் உபகரணங்களுடன் ஆழ்கடலில் மூழ்கி கிருஷ்ணர் கால துவாரகா நகரில் பிரார்த்தனை செய்தார்.