உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, ஜூன் 10 ஆம் திகதி வரை குறித்த உப்பு இறக்குமதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, 

மேலும், தொழிற்சாலைகளுக்குத் தேவையான அயடின் அல்லாத உப்பையும், நுகர்வுக்கான அயடின் கலந்த உப்பையும் இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.