18 நாட்களில் 140,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

18 நாட்களில் 140,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

இலங்கைக்கு பெப்ரவரி மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 138,736 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நேற்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

ரஷ்யாவில் இருந்து 20,101 பேரும், இந்தியாவில் இருந்து 18,564 பேரும், சீனாவில் இருந்து 10,696 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் 282,053 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.