பிரான்ஸில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை!

ஐரோப்பிய நாடுகளில் புகைப்பிடித்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் பிரான்ஸிலும் தற்போது பொது இடங்களில் புகை பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் திகதி முதல் இந்த தடைவிதிப்பு அமுலுக்கு வருகிறது.
இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கேத்தரின் வவுட்ரின் கூறுகையில், ‘‘குழந்தைகள் இருக்கும் இடத்தில் புகையிலை இருக்கக் கூடாது.
சுத்தமான காற்றை சுவாசிக்க குழந்தைகளுக்கு முழு உரிமை உள்ளது.
எனவே இந்த தடை கடுமையாக பின்பற்றப்படும். மீறினால் நிச்சயம் தண்டனை தரப்படும்’’ என்றார்.
பிரான்ஸில் ஒவ்வொரு ஆண்டும் 75,000 பேர் புகையிலை தொடர்பான உடல் பாதிப்புகளால் உயிரிழந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.