தேசிய வரி வாரம்” இன்று முதல் ஆரம்பம்

தேசிய வரி வாரம்” இன்று (02) ஆரம்பமாகின்றது. இதன் தொடக்க விழாவாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
"வரி சக்தி" என்ற பெயரில் வரி வாரத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன் இன்று முதல் 7 ஆம் திகதி வரை வாரத்தில் வரி செலுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்த்திருப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே.எஸ்.சாந்த தெரிவித்துள்ளார்