மகளிர் உலகக் கிண்ணம் - திகதி, இடங்களை உறுதிசெய்தது ஐ.சி.சி!

மகளிர் உலகக் கிண்ணம் - திகதி, இடங்களை உறுதிசெய்தது ஐ.சி.சி!

2025 ஆம் ஆண்டு ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணப்போட்டியிற்கான திகதிகள் மற்றும் இடங்களை ஐ.சி.சி உறுதிப்படுத்தியுள்ளது.

13ஆவது மகளிர் 50 ஓவர் உலகக் கிண்ணம் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை நடைபெறும், எட்டு அணிகள் பங்கேற்கும் போட்டிக்காக இந்தியா மற்றும் இலங்கை முழுவதும் ஐந்து இடங்களில் இடம்பெறவுள்ளது.

அதன்படி, எம். சின்னசாமி மைதானம் (பெங்களூர்), ஏ.சி.ஏ மைதானம் (கவ்ஹாத்தி), ஹோல்கர் மைதானம் (இந்தூர்), ஏ.சி.ஏ-வி.டி.சி.ஏ மைதானம் (விசாகப்பட்டினம்) மற்றும் ஆர். பிரேமதாச மைதானம் (கொழும்பு) ஆகியவை மைதானங்களில் இடம்பெறவுள்ளது.

பெண்கள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் எட்டு அணிகள் -  இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் என்பனவாகும்.