இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய அரசியலமைப்பை திருத்த அமைச்சரவை அனுமதி!

இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய அரசியலமைப்பை திருத்த அமைச்சரவை அனுமதி!

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.டி. சித்ரசிறி தலைமையில் கடந்த பெப்ரவரி மாதம் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய அரசியலமைப்புச் சட்டத்தை குழு தயாரித்து முடித்துவிட்டதாக அமைச்சரவை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச இலங்கை கிரிக்கெட் திட்டத்தை முறைப்படி ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கான வரைவு சட்டமூலத்தை தயாரிப்பதற்காக வெளிவிவகார அமைச்சர், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனை 29ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.