தகுதிகாண் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலகக் கிண்ண, தகுதிகாண் சுற்றின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 128 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

தகுதிகாண் இறுதிப் போட்டியில்  இலங்கை அணி வெற்றி!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலகக் கிண்ண, தகுதிகாண் சுற்றின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 128 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

ஹராரே மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 47.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 233 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, செஹான் ஆரச்சிகே 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற முதல் அரைச்சதம் இதுவாகும்.

அத்துடன், குசல் மெண்டிஸ் 43 ஓட்டங்களையும், சரித் அசலங்க 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், நெதர்லாந்து அணியின் விக்ரம்ஜித் சிங் 12 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 04 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், 234 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நெதர்லாந்து அணி 23.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில், அதிகபடியாக மேக்ஸ் டவுட் 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய நெதர்லாந்து அணியின் ஏனைய வீரர்கள் 25க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.

பந்துவீச்சில், இலங்கை அணியின் டில்ஷான் மதுஸங்க 18 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 35 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், மகீஷ் தீக்ஷன 26 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 14 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.