பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் டவ்ஹித் ஹ்ரிடோய்க்கு அபராதம்! 

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் டவ்ஹித் ஹ்ரிடோய்க்கு அபராதம்! 

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் டவ்ஹித் ஹ்ரிடோய் (Towhid Hridoy) க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று சில்ஹெட்டில் இலங்கைக்கு எதிரான  மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியின் போது அவர் களத்தில் இலங்கை வீரர்களுடன் கடுமையான வார்த்தை பரிமாற்றத்தில் ஈடுபட்டார்

பங்களாதேஷ் இன்னிங்ஸின் நான்காவது ஓவரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதன்படி, வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடத்தை விதிகளை அவர் மீறியமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில், டவ்ஹித் ஹ்ரிடோய் தம்மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளார்.

அதற்கமைய, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடத்தை விதிகளை மீறியதற்காக டவ்ஹித் ஹ்ரிடோய்க்கு அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த குற்றத்துக்காக அவரது ஒழுக்காற்றுப் பதிவில் ஒரு குறைபாட்டு புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.