குஜராத் டைடன்ஸ் அணி அபார வெற்றி!

குஜராத் டைடன்ஸ் அணி அபார  வெற்றி!

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

197 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் டைடன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கைக் கடந்தது.

போட்டியின் ஆட்ட நாயகனாக குஜராத் அணியின் ரஷிட் கான் தெரிவானார்.