இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காற்று:
காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும்.
சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு (30-40) கி.மீ. வரையிலும், அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ. வரையிலும் அதிகரிக்கும்.
தீவைச் சுற்றியுள்ள பிற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு (20-30) கி.மீ. வரையிலும் இருக்கும். சிலாபத்திலிருந்து கொழும்பு வழியாக காலி வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 45 கி.மீ. வரையிலும் அதிகரிக்கும்.
கடல் நிலை:
சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கும்.
சிலாபத்திலிருந்து கொழும்பு வழியாக காலி வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலும் உள்ள கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும், கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.