சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவு - 5 பேர் மாயம்

சுவிட்சர்லாந்தின் வாலேஸ் அருகேயுள்ள பனிமலை சிகரத்தில் நீண்ட காலமாக உருகி வந்த இராட்சத பனிப்பாறை ஒன்று நேற்று பயங்கர சத்தத்துடன் சரிந்து, மலை அடிவாரத்தில் உள்ள ஆல்பைன் கிராமத்தை பனிக்குவியல்களால் முழுமையாக மூடியது.
முன்னெச்சரிக்கையாக கிராமத்தில் இருந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இருப்பினும், சுமார் 100 வீடுகள் சேதமடைந்தன. மீட்பு பணியில் ஈடுபட்ட இராணுவ வாகனம் ஒன்று பனிச்சரிவில் சிக்கி மாயமானது. அதில் இருந்த 5-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளனர்.
தற்போது, மாயமானவர்களை கண்டறிய மீட்பு குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.