பேருந்து கட்டண திருத்தம் ஒத்திவைப்பு!

பேருந்து கட்டண திருத்தம் ஒத்திவைப்பு!

ஜூலை மாதம் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த வருடாந்திர பேருந்து கட்டண திருத்தத்தை ஆகஸ்ட் வரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணங்களை திருத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று LPBOA தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று (01) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.