இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான தடையை நீக்க முடிவு!

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான தடையை நீக்க முடிவு!

உள்நாட்டு போரின் போது நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக தங்கியிருக்கும் இலங்கையர்களின் நுழைவுக்கான தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதற்காக தற்போதுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

போரின் போது, வடக்கில் வாழ்ந்த மக்கள் பாதுகாப்புக்காக இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்று தற்போது இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

இவ்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு தற்போதுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்கள் தடையாக இருப்பதால், அவற்றைத் திருத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எனவே, இதற்காக விரைவில் அமைச்சரவைப் பத்திரம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இந்தியாவில் இருந்து கடல் வழியாக இந்த நாட்டிற்கு வந்த ஒரு சிறு குழந்தை உட்பட மூன்று பேர் தலைமன்னார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக நாட்டுக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

24 வயதுடைய தம்பதியினரும் மூன்றரை வயது குழந்தையும் நாட்டுக்கு இவ்வாறு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்கள் 2023 மே மாதம் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

அதேநேரம், பலாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையகத்தின் (UNHCR) உதவியுடன் இந்தியாவிலிருந்து திரும்பிய 75 வயது இலங்கை அகதி, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தால் நேற்று (03) விடுவிக்கப்பட்டார்.

இந்தக் கைது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனின் விமர்சனத்திற்கு உள்ளானது.

அந்த நபர் தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

இந்த நடவடிக்கை நாடு திரும்ப பதிவுசெய்யப்பட்ட கிட்டத்தட்ட 10,000 அகதிகளை ஊக்கப்படுத்தாமல் போகக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.