சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம்!

சுகாதார அமைச்சு தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காததால், இன்று (05) நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மற்றொரு வேலைநிறுத்தத்தை தொடங்கப்போவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 8.00 மணி முதல் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் கூட்டமைப்பு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம எச்சரித்துள்ளார்.
இருப்பினும், புற்றுநோய் மருத்துவமனை, மகப்பேறு மற்றும் சிறுவர் மருத்துவமனை, சிறுநீரக மருத்துவமனை மற்றும் மத்திய இரத்த வங்கி உள்ளிட்ட குறிப்பிட்ட நிறுவனங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது.
பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் கூட்டமைப்பு அண்மையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதன் விளைவாக, நோயாளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மருத்துவ ஆய்வக ஆராய்ச்சி வல்லுநர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் பலர் உட்பட நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் கூட்டமைப்பைச் சேர்ந்தோர் இந்த பணிப்பகிஷ்கரிப்பினை இன்று முன்னெடுப்பார்கள் என்றும் சானக தர்மவிக்ரம குறிப்பிட்டார்.