காஸாவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஒரு மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கியது இலங்கை

காஸாவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு  ஒரு மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கியது இலங்கை

காஸா பகுதியில் ஏற்பட்ட மோதலினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதற்காக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியது.

இன்று (01) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மேற்பார்வையில் ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ சேனல் ஊடாக பாலஸ்தீன அரசாங்கத்திற்கு இந்த நன்கொடை முறைப்படி மாற்றப்பட்டது.

இந்த நன்கொடை காசோலையை இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் சுஹைர் சைட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் வழங்கினார்.