இம்ரான் கானின் 14 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு 

இம்ரான் கானின் 14 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பரிசீலிக்க முடிவு செய்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இருப்பினும், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஏனைய குற்றச்சாட்டுகள் காரணமாக இன்னும் சிறையில் உள்ளார்.