இலங்கைக்கு கடத்தவிருந்த 400 லீற்றர்  பெற்றோல் தமிழகத்தில் கைப்பற்றப்பட்டது!

தமிழ் நாடு - தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த சுமார் 400 லீற்றர் பெற்றோலை, வடபாகம் பொலிஸார் நேற்று பறிமுதல் செய்துள்ளனர். 

இலங்கைக்கு கடத்தவிருந்த 400 லீற்றர்  பெற்றோல் தமிழகத்தில் கைப்பற்றப்பட்டது!

தமிழ் நாடு - தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த சுமார் 400 லீற்றர் பெற்றோலை, வடபாகம் பொலிஸார் நேற்று பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி - திரேஸ்புரம் கடற்கரையில் வடபாகம் தனிப்படை பொலிஸார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, 9 கொள்கலன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த பெற்றோலை இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சந்தேகநபருடன் கைப்பற்றப்பட்ட பெற்றோலை சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, வடபாகம் தனிப்படை பொலிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.