கேரள மண்சரிவால் பலி எண்ணிக்கை 340ஆக அதிகரிப்பு!

கேரள மண்சரிவால் பலி எண்ணிக்கை 340ஆக அதிகரிப்பு!

கேரள மண்சரிவில் மீட்புப் பணி 4ஆவது நாளாக தீவிரமடைந்து வருகின்ற நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340ஆக உயர்ந்துள்ளது.

கேரளா மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக அடுத்தடுத்து ஏற்பட்ட மண்சரிவில் ஏற்பட்டது. 

மண்சரிவில் சிக்கியவர்களை இந்திய இராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, கடற்படையினர், வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் காணாமல் போனவர்களை தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட கருவிகள் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது 1500இற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 344ஆக அதிகரித்துள்ளது.