இந்தியாவில் 242 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விபத்து! - இதுவரையான தகவல்கள்!

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானமான AI-171, சர்தார் வல்லபாய் படேல் அகமதாபாத் விமான நிலையத்தில் வியாழக்கிழமை (12) புறப்பட்ட சிறுதி நேரத்தில் விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் மொத்தம் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இருந்ததாக குஜராத் மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில், 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டினர், 1 கனேடிய நாட்டினர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர்.
ஏர் இந்தியா விமானம் ஒரு போயிங் 727 இரட்டை ஜெட் விமானமாகும்.
காவல் கட்டுப்பாட்டு அறையின் தகவலின்படி, ஏர் இந்தியா விமானம் AI 171 லண்டனுக்கு புறப்பட்ட சிறுது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் (SVPIA) தற்போது செயல்படவில்லை.
அனைத்து விமான நடவடிக்கைகளும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனிநகர் பகுதிக்கு அருகில் இந்த சம்பவம் இன்று பிற்பகல் நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளில், அவசரகால மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, வானத்தில் அடர்ந்த கரும்புகை கிளம்பியது தெரிந்தது.
தீயைக் கட்டுப்படுத்த குறைந்தது ஏழு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
இது குறித்த கூடுதல் விவரங்கள் காத்திருக்கின்றன.
இந்த விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வால் தலைமை தாங்கினார்.
அவர் 8,200 மணிநேர பறக்கும் அனுபவமுள்ள ஒரு லைன் பயிற்சி கேப்டன் (LTC) ஆவார்.
அவருக்கு 1,100 மணிநேர பறக்கும் அனுபவமுள்ள முதல் அதிகாரி கிளைவ் குந்தர் உதவினார்.
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் (ATC) தகவலின்படி, விமானம் ஓடுபாதை 23 இல் இருந்து பிற்பகல் 13:39 IST (08:09 UTC) மணிக்கு புறப்பட்டது.
புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, விமானம் விமான நிலைய சுற்றளவுக்கு வெளியே விபத்துக்குள்ளானது.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், விபத்து குறித்து மிகவும் வருத்தமடைந்ததாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தினார்.