நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய இயந்திரம் செயலிழப்பு

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய இயந்திரம் செயலிழப்பு

நுரைச்சோலையில் உள்ள 3ஆவது மின் உற்பத்தி நிலையம் இன்று (13) நள்ளிரவு முதல் பழுதுபார்ப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும் என்று மின்சாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பழுதுபார்ப்பு பணிகள் 25 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, தேசிய மின்சார கட்டமைப்பு 300 மெகாவாட் மின் உற்பத்தியை இழக்கும்.

இருப்பினும், 2 மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பாட்டில் இருப்பதால், மின்சார விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது என்று மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.

மூன்றாவது மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் மீண்டும் இணைக்கப்பட்ட பிறகு, நுரைச்சோலை மின் நிலையத்தில் உள்ள முதல் மின் உற்பத்தி நிலையம் பழுதுபார்ப்பு பணிகளுக்காக அனுப்பப்பட உள்ளது.

இதற்கிடையில், 1 1/2 மாதங்களாக பழுதுபார்ப்பு பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ள களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையம், அடுத்த சில நாட்களில் மின் உற்பத்திக்காக மீண்டும் இணைக்கப்பட உள்ளது.

இது தேசிய மின் கட்டமைப்புக்கு 165 மெகாவாட் மின் திறனை சேர்க்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.