இந்திய கடல் பரப்பில் கவிழ்ந்த கப்பலில் ஆபத்தான கொள்கலன்கள் - சுற்றுச்சூழல் அமைச்சு

இந்திய கடல் பரப்பில் கவிழ்ந்த கப்பலில் ஆபத்தான கொள்கலன்கள் - சுற்றுச்சூழல் அமைச்சு

சமீபத்தில் இந்திய கடல் பரப்பில் கவிழ்ந்த எம்.எஸ்.சி எல்சா 3 கப்பலில் 13 ஆபத்தான கொள்கலன்கள் இருந்ததாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

கப்பலில் உள்ள சில பொருட்கள் தற்போது நாட்டின் கடற்கரைகளில் கரையொதுங்கியுள்ளதாக அதன் கூடுதல் செயலாளர் எச்.எம்.பி. அபேகோன் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய கூடுதல் செயலாளர் எச்.எம்.பி. அபேகோன், நிலவும் மோசமான வானிலை காரணமாக, கப்பலில் உள்ள பொருட்கள் அதிகளவு கரையொதுங்கும் என்று கூறினார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் பொது மேலாளர் ஜகத் குணவர்தன, கடற்கரையில் கரையொதுங்கிய பொருட்களை அகற்றும் பணி இன்று (13) முதல் தொடங்கும் என்று தெரிவித்தார்.