மதவாத கருத்து வெளியிட்ட சத்தாரதன தேரரை கைது செய்ய பிடியாணை!

மதவாத முரண்பாட்டு கருத்து வெளியிட்ட ராஜாங்கனயே சத்தாரதன தேரரை கைது செய்யுமாறு கொழும்பு - கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மதவாத கருத்து வெளியிட்ட சத்தாரதன தேரரை கைது செய்ய பிடியாணை!

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் முன்னதாக கைது செய்யப்பட்ட அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எனினும் குறித்த வழக்கு இன்று மீண்டும் திறந்த நீதிமன்றில் விசாரணைக்க எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதிவாதியான ராஜாங்கனயே சத்தாரதன தேரர் நீதிமன்றில் ஆஜராகவில்லை.

எனவே, அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு - கோட்டை நீதவான் திலின கமகே பிடியாணை பிறப்பித்துள்ளார்.