புலமைப் பரீட்சை தொடர்பில் அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன இன்று (04) சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.