ட்ரம்ப் தொடர்பான விமர்சனம்: வருத்தம் தெரிவித்த எலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்பாக தான் வெளியிட்ட பதிவுகள் குறித்த வருந்துவதாக பிரபல தொழிலதிபரும் Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் தலைவருமான எலோன் மஸ்க் (Elon Musk) தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கடந்த வாரம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறித்து வெளியிட்ட சில பதிவுகளுக்கு வருந்துகிறேன். வரம்பு மீறி சென்றுவிட்டதை உணர்கிறேன்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அண்மைக்காலமாக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். குறிப்பாக பல நாடுகளுக்கு அதிகளவான இறக்குமதி வரிகளையும் விதித்து உத்தரவிட்டார்.
ட்ரம்பின் அதிரடி உத்தரவுகள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்பின் இத்தகைய செய்பாடுகளால் நாட்டின் பெருளாதாரம் வீழ்சியை சந்திக்க நேரிடும் என எலோன் மஸ்க் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து எலான் மஸ்க்குடனான உறவு முடிந்துவிட்டது. அவர் ஜனாதிபதி பதவியின் மாண்புக்கு அவமரியாதை செய்துவிட்டார்” எனஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் ட்ரம்ப் தொடர்பாக தான் வெளியிட்ட குறித்து வருந்துவதாக எலோன் மஸ்க் தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.