தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவித்தல் தொடர்பான சட்டமூலம்!

தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவித்தல் தொடர்பான சட்டமூலம்!

தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிப்பது தொடர்பான சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” தாய்ப்பால் ஊட்டும் குறிகாட்டி தொடர்பில் இலங்கை மிகவும் உயர்ந்த மட்டத்தில் இருப்பதுடன், இலங்கை World Breastfeeding Trends Initiative (WBTI) அமைப்பினால் Green Status வழங்கப்பட்ட நாடாகும்.

வர்த்தக ரீதியான குறிக்கோளை முன்நிலைப்படுத்தி பாலமா உற்பத்தித் தொழிற்றுறை மூலம் பிள்ளைகளுக்கு விடுக்கப்படும் ஒழுக்கநெறிக்கு முரணான மற்றும் பாதகமான தாக்கங்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாத்து, பிள்ளைகளின் சுகாதார மற்றும் போசாக்கை பாதுகாப்பதும், விஞ்ஞான ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ள பிரதான தலையீடாக கருதி தாய்ப்பால் ஊட்டுதலை பாதுகாப்பதற்கும், தாய்ப்பால் ஊட்டுதல் தொடர்பான உலக முன்னோடி என்ற ரீதியில் இலங்கை பெற்றுள்ள மரியாதையை தொடர்ச்சியாக பேணுதலை உறுதி செய்வதையும் குறிக்கோளாக கொண்டு தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்குவிப்பதற்கான சட்டத்தின் மூலம் சட்ட ரீதியான ஏற்பாடுகளை அறிமுகம் செய்வதற்காக 2018-10-16 திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு தற்போதைய அமைச்சரவையின் கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமரப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது” இவ்வாறு குறிப்பிடப்பட்டள்ளது.