வாக்குமூலம் வழங்க சென்ற கட்சி உறுப்பினர்கள் கிளிநொச்சி காவல்துறையால் கைது!

வாக்குமூலம் வழங்க சென்ற கட்சி உறுப்பினர்கள் கிளிநொச்சி காவல்துறையால் கைது!

மருதங்கேணி சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையான, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், கிளிநொச்சி காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் - மருதங்கேணியில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மக்கள் சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டிருந்த போது, காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று காவல்துறையில் முன்னிலையான தமது கட்சி உறுப்பினர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.