பிரித்தானியாவுக்கு சென்ற 5 சிறிலங்கா பொலிஸார் நாடு திரும்பவில்லை!

பிரித்தானியாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்கச் சென்ற 5 பொலிஸ் அதிகாரிகள், சிறிலங்காவுக்கு திரும்பவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு சென்ற 5 சிறிலங்கா பொலிஸார் நாடு திரும்பவில்லை!

பிரித்தானியாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்கச் சென்ற 5 பொலிஸ் அதிகாரிகள், சிறிலங்காவுக்கு திரும்பவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அவர்கள் குறித்து, விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, கிடைக்கப்பெற்ற அழைப்பிதழுக்கு அமைய, தங்களது தனிப்பட்ட செலவில் விமானப் பயணச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, அவர்கள் பிரித்தானியா சென்றுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.