இறுதி யுத்தத்தில் காணாமல் போன மற்றும் உயிரிழந்தவர்களுக்கு காசால் விலை பேசுகிறீர்கள் - சிறிதரன் எம்.பி. காட்டம்!

இறுதி யுத்தத்தில் காணாமல் போன மற்றும் உயிரிழந்தவர்களுக்கு நீங்கள் காசால் விலை பேசுகிறீர்களே தவிர அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

முதலைகளுக்கு கூட மனிதர்களை வெட்டிப் போட்ட சம்பவங்கள் இந்த நாட்டில் தான் நடந்திருக்கின்றன.

அந்த விடயத்தை வெளிப்படுத்தியவர் அண்மையில் இந்த சபையில் பேசும் போது கூறியிருந்தார், “இந்த நாட்டின் அரைவாசியை பிரபாகரனிடம் கொடுத்திருந்தால் இந்த நாடு என்ன கதியாகியிருக்கும் என்று கூறினார்.

இஸ்ரேல் காசா பிரச்சினையை ஒப்பிட்டு அவர் பேசியிருந்ததையும் நான் அவதானித்தேன்.

நல்லிணக்கத்தின் கதவுகளை இறுகப் பூட்டி சீல் வைத்து விட்டு, இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்குகின்றார்கள் என்றால், இது கண்ணை மூடிக்கொண்டு பூனை பால் குடிப்பது போன்று உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.