உள்நாட்டு கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனை தொடர்பான விவாதம் ஆரம்பம்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட யோசனை தொடர்பிலான விவாதம் நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. 

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனை தொடர்பான விவாதம் ஆரம்பம்!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனை தொடர்பில், தற்சமயம் நாடாளுமன்றில் விவாதம் இடம்பெறுகின்றது.

சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இன்று முற்பகல் இந்த யோசனையை, சபையில் சமர்ப்பித்தார்.

'இறையாண்மைப் படுகடன் நிலைபெறுதன்மையை மீட்டெடுப்பதற்கு, உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம்' என்ற தலைப்பில் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இரவு 7.30 வரையில், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட யோசனையை விவாதத்திற்கு உட்படுத்தி, அதன் பின்னர், வாக்கெடுப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.