2023 - உலகக் கிண்ண முதல் அரையிறுதிப் போட்டி நாளை!

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் முதலாவது அரையிறுதிப் போட்டி நாளை (14) நடைபெறவுள்ளது.

2023 - உலகக் கிண்ண முதல் அரையிறுதிப் போட்டி நாளை!

இந்தப் போட்டி இந்திய அணிக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இம்முறை, போட்டியை நடத்தும் இந்திய அணி, ஆரம்ப சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தோல்வியடையாத அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. 

நியூசிலாந்து அணி தான் பங்கேற்ற 9 போட்டிகளில் 5 இல் வெற்றி பெற்றுள்ளது.

இதனையடுத்து, இரண்டாவது அரையிறுதி ஆட்டம் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நாளை மறுதினம் (15) நடைபெறவுள்ளது.