பலாங்கொடை மண்சரிவில் சிக்கிய நால்வரின் சடலங்களும் கண்டெடுப்பு!

பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்குண்டு உயிரிழந்த நான்கு பேரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பலாங்கொடை மண்சரிவில் சிக்கிய நால்வரின் சடலங்களும் கண்டெடுப்பு!

இந்த பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மண்சரிவொன்று ஏற்பட்டது.

இந்த மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் புதையுண்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, மண்ணில் புதையுண்டவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிலையில், இரண்டு தினங்களின் பின்னர் நால்வரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, 10 வயது மற்றும் 16 வயதான இரண்டு பெண் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.