இந்திய அணியிடம் படுதோல்வியடைந்தஇலங்கை - 302 ஓட்டங்கள் வித்தியாசம்!

2023ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணக் கிரிக்கட் தொடரில் இலங்கை அணி இந்திய அணியிடம் 302 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

இந்திய அணியிடம் படுதோல்வியடைந்தஇலங்கை - 302 ஓட்டங்கள் வித்தியாசம்!

புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணிக்கும் 4 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ள இலங்கை அணிக்கும் இடையில் இன்றைய போட்டி இடம்பெற்றது.

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 357 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பாக ஷப்மன் கில் (Shubman Gill) 92 பந்துகளில் 92 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி (Virat Kohli) 94 பந்துகளில் 88 ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) 56 பந்துகளில் 82 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்தநிலையில் 358 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 55 ஓட்டங்களை மாத்திரமே பெற்று படுதோல்வியடைந்தது.