மாணவி அம்ஷியின் மரணம் - அரசிடம் நீதி கோரிய மனோ கணேசன்!

டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெறும் பெற்றோரின் ஆர்ப்பாட்டத்திற்கு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ள பொலிஸார் தயாராகியுள்ள நிலையில் அதனை தடுத்து நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ‘ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆயுதபோராளிளோ, கலககாரர்களோ அல்ல, அநீதியை தட்டிக்கேட்க வந்தவர்கள் எனவும் மனோ கணேசன் தெரிவித்துத்துள்ளார்.
அத்துடன் மாணவி படித்த தனியார் கல்வி நிலையத்தின் நிறுவனர் உங்கள் கட்சி சார்ந்தவர் எனவும், இதனால் தான் மக்களுக்கு சந்தேகம் வருகின்றது எனவும், எனவே அரசியல் அழுத்தமில்லாத நீதியான விசாரணை வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் அரசு ஒரு விசாரணைக்குழு ஒன்றை அமைத்து உடனடியாக விசாரிக்க வேண்டும் எனவும் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.