புலமைப்பரிசில் பரீட்சை மீளாய்வு தொடர்பான முடிவுகள் வெளியீடு

புலமைப்பரிசில் பரீட்சை மீளாய்வு தொடர்பான முடிவுகள் வெளியீடு

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 6 இல் மாணவர்களை சேர்ப்பதற்கான மீளாய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

http://g6application.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் முடிவுகளைப் பார்வையிடலாம். மேலும் மீளாய்வு மூலம் பாடசாலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் அனுமதி தொடர்பான விபரங்களை பாடசாலை அதிபரிடம் பெற்று கொள்ளமுடியும்.