இலங்கைச் சிறுவர்கள் கடத்தல் - மலேசியா ஊடாக பிரித்தானிய, ஐரோப்பிய நாடுகளுக்கு..!

இலங்கைச் சிறுவர்கள் மலேசியா ஊடாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கு கடத்தப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை

இலங்கைச் சிறுவர்கள் கடத்தல் - மலேசியா ஊடாக பிரித்தானிய, ஐரோப்பிய நாடுகளுக்கு..!

இலங்கைச் சிறுவர்கள் மலேசியா ஊடாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கு கடத்தப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித கடத்தல் தொடர்பான விசாரணை பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் தெரிவிக்கப்பட்ட முறையிடலுக்கு அமைய விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 18 வயதுக்கு குறைவான 13 தமிழ் சிறுவர்கள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இடைத்தரகர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.