ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் உயிரணுக்களை கொல்லும் முயற்சியில் பாதுகாப்பு துறை!

ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் உயிரணுக்களை கொல்லும் முயற்சியில் வடக்கில் உள்ள பாதுகாப்பு துறையில் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (25) காலை உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, மலையக உறவுகள் இன்று எதிர்நோக்கும் இன்னல்கள் மற்றும் அரசாங்கம் அவர்கள் மீது கரிசனை கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன் பொது வலியுறுத்தினார்.

அத்துடன், ஈழப் போராட்டத்தின் போதும் மலையக மக்கள் உயிர் தியாகம் செய்தமையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இதனிடையே, அரச துறைகளில் உள்ள தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என பரிந்துரைக்கப்பட்ட போதும், மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எந்தவித அக்கறையும் செலுத்தப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் இதன்போது, குற்றம்சுமத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய அவர், வடக்கு கிழக்கு போராட்ட காலத்திலும் மலையக மக்கள் பெரும் உயிர்த்தியாகங்களை மேற்கொண்டதாக சுட்டிக்காட்டினார்.

இதனைத்தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், “மலையகத்தில் உள்ள கட்சிகளே தம்முடன் ஒத்துழைப்புடன் செயற்படாத நிலையில், வடக்கு கிழக்கு சார்ந்த கட்சியின் உறுப்பினர்கள் மலையக மக்கள் தொடர்பில் கரிசனை கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது” என்று குறிப்பிட்டார்.