அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 தமிழக மீனவர்கள் கைது!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 தமிழக மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதிக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யபட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதானவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டு கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.