களுகங்கையில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழப்பு!

களுகங்கையில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழப்பு!

களுத்துறை - களுகங்கையில் நீராடச் சென்ற 16 வயதுடைய இரண்டு பாடசாலை மாணவிகளும் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, பன்வில மற்றும் தொடங்கொட பகுதிகளைச் சேர்ந்தவர்களே சம்பவத்தில் உயிரிழந்தனர்.

வேடிக்கைக்காக நீராடச் சென்ற மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூவரும் மீட்கப்பட்டு களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

 அவர்கள் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.