புகையிரத திணைக்களத்திற்கு 10 கோடி ரூபாய் வருமான இழப்பு!

புகையிரத திணைக்களத்திற்கு 10 கோடி ரூபாய் வருமான இழப்பு!

பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற இரண்டு தினங்களில் புகையிரத திணைக்களத்திற்கு ஏறக்குறைய 10 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

சாதாரண நாளில் ரயில்வே துறையின் பயணிகள் போக்குவரத்து அனுமதிச்சீட்டு வருமானம் 4 கோடி ரூபாயாகும். 

அந்த வருவாயுடன் பண்டங்கள் உள்ளிட்ட இதர வருவாயையும் சேர்த்தால் தினசரி வருமானம் சுமார் 5 கோடி ரூபாயாகும் என்று அதிகாரி கூறினார்.

ரயில் நிலையங்களில்  அனுமதிச்சீட்டு வழங்கத் தவறியதால், வேலை நிறுத்த நாட்களில் ஓடிய ரயில்களில் பயணம் செய்த பயணிகளுக்கு அனுமதிச்சீட்டு  கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.