வடக்கிலும், மலையகத்திலும் மதுபானசாலைகளுக்கு பூட்டு!

வடக்கிலும், மலையகத்திலும் மதுபானசாலைகளுக்கு பூட்டு!

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை [15] வடக்கு மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலும் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, நுவரெலியா மாவட்டத்திலும் பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை, ரிதிமாலியத்தை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படும்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினத்தில் மூடப்படவுள்ளன.