உலக வாழ் தமிழர்கள் தைத்திருநாளை கொண்டாடுகின்றனர்!

உலக வாழ் தமிழர்கள் தைத்திருநாளை  கொண்டாடுகின்றனர்!

அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

உலக வாழ் தமிழர்கள் இன்றையதினம் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் வழமை போன்று தைப்பொங்கலை கொண்டாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், தைப்பொங்கலை முன்னிட்டு, பொருட்களை கொள்வனவு செய்தற்கான ஆர்வமும் இயலுமையும் மக்கள் மத்தியில் குறைந்துள்ளதை அவதானிக்க முடிவதாக வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும், இந்த புதிய ஆண்டில் அனைவருக்கும் சுபீட்சமான வாழ்க்கை அமைந்து நெருக்கடிகள் தீர நாம் பிரார்த்திக்கிறோம்.