இனவலியோடு விதையுண்ட போராளி சாந்தனுக்கு கனடியத் தமிழரின் மலர் வணக்கம்!

இனவலியோடு விதையுண்ட போராளி சாந்தனுக்கு கனடியத் தமிழரின் மலர் வணக்கம்!

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் செய்யாத குற்றத்திற்காக 32 ஆண்டுகள் சிறைக்குள் தன் இளமையைத் தொலைத்து வதைபட்ட சாந்தன் உள்ளிட்ட ஏழு தமிழரையும் உச்சநீதிமன்றம் விசாரித்து விடுதலை செய்த நிலையில் அவர்களில் ஈழத் தமிழர் நால்வரை விடுதலை செய்ய இந்திய தமிழக அரசுகள் மறுத்துச் சிறையை விடக் கொடிய திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வதைத்து.

 நோயுறச் செய்து தக்க பராமரிப்பு, மருத்துவ சிகிச்சைகளின்றி வைத்திருந்த நிலையில் (28. 2.2024) காலை சென்னை தலைமை (ராசீவ் காந்தி) மருத்துவமனையில் காலமானார்.

எம் இனத்திற்காக இன வலி சுமந்த சாந்தன் அண்ணாவிற்கு நினைவு வணக்க நிகழ்வு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இன் நிகழ்வில் மலர் தூவி வணங்க அனைவரும் வாருங்கள்!

 இடம்: Scarborough Event Centre முகவரி: 5637 Finch Ave East, Scarborough

காலம்: பெப்ரவரி 3, 2024, ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மாலை 5:00

மேலதிக தொடர்புகளிற்கு: 437-989-8082