பப்புவா நியூ கினி ஆளுநருக்கு'  சாதனைத் தமிழன் 'விருது.

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு'  சாதனைத் தமிழன் 'விருது.

பப்புவா நியூ கினி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக தலைநகர் போர்ட் மோர்ஸ்பையில் நடந்த தீப விழாவில்,
தமிழ்நாடு, சிவகாசியைப் பிறப்பிடமாகக் கொண்ட பப்புவா நியூ கினி மேற்கு நியூ பிரிட்டன்
மாகாணத்தின் ஆளுநர்,  மாண்புமிகு திரு. சசீந்திரன் முத்துவேல் அவர்களுக்க 'சாதனைத் தமிழன் 'விருதினை
பப்புவா நியூ கினி வாழ்  இலங்கை தமிழரும், IBSU பல்கலைக் கழக நிறுவனத் தலைவருமான  திரு. மாணிக்கம் நடேசலிங்கம் வழங்கி கௌரவித்தார். 

ஆளுநர் அவர்களின் உயரிய சேவகளுக்காக, பப்புவா நியூ கினி நாட்டு அரசாங்கத்தின் பல உயரிய  விருதுகளையும், பட்டங்களையும் பெற்றது மட்டுமல்லாமல், சமீபத்தில், இந்திய நாட்டின் பத்மஸ்ரீ விருதுக்கும் தேர்வு செய்யபட்டிருப்பதும் குறிப்படத்தக்கது. இத் தீப விழாவில், பப்புவா நியூ கினி வாழ் தமிழ் மக்களும் தமிழ்ச் சங்கத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.