பிரதீப் ஷர்மாவிற்கு  ஆயுள் தண்டனை!  

பிரதீப் ஷர்மாவிற்கு  ஆயுள் தண்டனை!  

மகாராஷ்டிர முன்னாள் காவல்துறை அதிகாரியும், என்கவுன்ட்டர் சிறப்பதிகாரியுமான  பிரதீப் ஷர்மாவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2009ஆம் ஆண்டு ராம் நாராயண் குப்தா என்ற லக்கன் பையாவின் போலி என்கவுன்ட்டர் வழக்கில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று வாரங்களுக்குள் அவர் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

25 ஆண்டுகள் காவல் துறையில் பணியாற்றிய பிரதீப் ஷர்மா கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் தீவிரம் காட்டி வந்தார். ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பால் அவரது அரசியல் முயற்சிகளுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளமை. குறிப்பிடத்தக்கது.