வடக்கு - கிழக்கு மீள்குடியேற்றம் 03 வருடங்களுக்குள் பூர்த்தியாகும் - இலங்கை அரசாங்கம்

எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவித்துள்ளார்.

வடக்கு -  கிழக்கு  மீள்குடியேற்றம் 03 வருடங்களுக்குள் பூர்த்தியாகும் - இலங்கை அரசாங்கம்

இடம்பெயர்ந்த 274,120 குடும்பங்களைச் சேர்ந்த 917,143 பேர் அந்த மாகாணங்களில் ஏலவே மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, 1,701 குடும்பங்களைச் சேர்ந்த 4,999 பேரே இன்னும் எஞ்சியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.