மலையக தமிழ் மக்கள் பற்றிய ஜனாதிபதியின் யோசனைக்கு அனுமதி!

மலையக தமிழ் மக்களை இலங்கைச் சமூகத்தில் முழுமையாக ஒன்றிணைப்பதற்கான வேலைத்திட்டங்களை செயற்படுத்துவது பற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

மலையக தமிழ் மக்கள் பற்றிய ஜனாதிபதியின் யோசனைக்கு அனுமதி!

இலங்கைக்கு மலையக மக்கள் வந்து குடியேறி 200 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவுகூர்ந்து தேசிய நிகழ்ச்சித் திட்டமொன்றை நடத்துவதற்கும், அந்த சமூகத்தின் அபிவிருத்திக்காக தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் மேலும் பல நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய இலங்கைப் பிரஜைகளான மலையக சமூகத்தின் அபிவிருத்திக்காக கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கும், பொருளாதார, தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கும், நிரந்தர வதிவிடத்துடன் கூடிய உயரிய வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்துவதற்கும் சாத்தியமாகும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்டகட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றுடன் இணைந்து குறித்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்காக பிரதமர் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.